Monday, August 22, 2016

உழவன்



உழவன்
கதிரவக் கொற்றோனே வியர்வை முத்தோனே

நிலையிலாக் காரணிகளின் துணையோடு

நின்னுயிரினை முதலீட்டாய் வித்திட்டு

உலகை உயிர்விக்கும் உழவனே !



வணிக நுணுக்கங்கள் எட்டாக் கனியென‌

இடைத் தரகர்களிடம் வீழ்ந்திட்டாய்

வேதனையில் நின்னுயிர் மாய்த்தால் ஆளும்

கூட்டம் அவசரகதியில் காரணம் தேடும்



உலகம் உன்னிடர் களைய விழைந்தால்

உமக்குண்டாம் நிலையான‌ வாழ்வு !!



‍‍- பரிதிசெல்வன்

(பா.இரவிக்குமார்)